/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாலியல் தொழில் நடத்திய இருவர் கைது
/
பாலியல் தொழில் நடத்திய இருவர் கைது
ADDED : மே 01, 2024 12:44 AM
வேப்பேரி, சென்னையில், வெவ்வேறு பகுதியில் பாலியல் தொழில் நடத்தி வந்த பெண் உட்பட இருவரை, விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
கோயம்பேடு, அவ்வை திருநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், பாலியல் தொழில் நடப்பதாக, விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு ஆய்வு மேற்கொண்டனர். இதில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த திலிபன் தென்னரசு, 27, என்பவர், பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் சிக்கியிருந்த பெண்ணை மீட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
அதேபோல், நீலாங்கரை பகுதியில் பாலியல் தொழில் நடத்தி வந்த, ஸ்டெல்லா, 40, என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் சிக்கியிருந்த பெண்ணை மீட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.