/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிளம்பருக்கு மது பாட்டில் அடி இருவர் கைது
/
பிளம்பருக்கு மது பாட்டில் அடி இருவர் கைது
ADDED : ஆக 26, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திரு.வி.க. நகர்:திரு.வி.க. நகர், வெற்றி நகரைச் சேர்ந்தவர் கோபி, 26; பிளம்பர். இவர், கடந்த 20ம் தேதி, சக்திவேல் நகர் பார்க்கில் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார்.
அப்போது, அங்கிருந்த நபர்கள், கோபியிடம் வீண் தகராறு செய்து, மது பாட்டிலால் தலையில் அடித்துள்ளனர். காயமடைந்த அவருக்கு, பெரியார் நகர் மருத்துவமனையில் ஏழு தையல்கள் போடப்பட்டன.
இது குறித்து விசாரித்த திரு.வி.க. நகர் போலீசார், பெரவள்ளூரைச் சேர்ந்த சந்தோஷ், 25, கொளத்துாரைச் சேர்ந்த பிரதீப், 29, ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.