ADDED : ஆக 01, 2024 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி, ஓட்டேரி, நியூ பேரன்ஸ் சாலையில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில், சந்தேகப்படும்படி போதை மாத்திரையுடன் இருந்த ஹபிபுல்லா, 35 என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அவர் அளித்த தகவலின் அடிப்படையில், ஓட்டேரி நேருஜி ஜோதி நகர் பகுதியில் சோதனையிட்ட போது, அங்கு விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக ஓட்டேரி வாழைமா நகரைச் சேர்ந்த சந்தோஷ்,22 என்பவரையும் செய்தனர்.