ADDED : மே 06, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எம்.கே.பி.நகர்:சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர் சுடுகாடு அருகே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், கத்தியுடன் மர்ம நபர்கள் சுற்றி திரிவதாக, எம்.கே.பி.நகர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, கத்தியுடன் திரிந்த வியாசர்பாடி, மல்லிப்பூ காலனியை சேர்ந்த பிரபாகரன், 32, வியாசர்பாடி, எம்.கே.பி.நகரைச் சேர்ந்த சந்திரன், 21, ஆகியோரை, நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.