sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பழவேலியில் பஞ்சராகி நின்ற கார் சரிபார்த்த இருவர் விபத்தில் பலி

/

பழவேலியில் பஞ்சராகி நின்ற கார் சரிபார்த்த இருவர் விபத்தில் பலி

பழவேலியில் பஞ்சராகி நின்ற கார் சரிபார்த்த இருவர் விபத்தில் பலி

பழவேலியில் பஞ்சராகி நின்ற கார் சரிபார்த்த இருவர் விபத்தில் பலி


ADDED : ஜூன் 19, 2024 12:33 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, மயிலாடுதுறை மாவட்டம், மல்லியம் அடுத்த ஆனைமேல் அகரம் பகுதியைச் சேர்ந்தவர் ரியாசுதீன், 38. நேற்று அதிகாலை, துபாய் செல்வதற்காக, சந்துரு, 41, என்பவரின் 'ஹூ ண்டாய் ஷிப்ட்' காரில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.

ரியாசுதீனை வழியனுப்ப, அவரது நண்பர்களான மல்லியம் அய்யப்பன், 38, அன்வர் சாதிக், 35, உள்ளிட்டோர் வந்தனர். அதிகாலை 5:20 மணிக்கு, ஜி.எஸ்.டி., சாலை செங்கல்பட்டு பழவேலி அருகில் வந்தபோது, கார் டயர் பஞ்சரானது.

இதனால், சாலையோரம் காரை நிறுத்தி, சந்துரு கார் டயரை மாற்றிக்கொண்டிருந்தார்.

அவருக்கு உதவியாக ரியாசுதீன் இருந்தார். மற்ற இருவரும் சற்று தள்ளி நின்றிருந்தனர். அப்போது, அவ்வழியே அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார், பஞ்சராகி நின்ற 'ஹூ ண்டாய் ' கார் மற்றும் சந்துரு, ரியாசுதீன் மீது மோதி, நிற்காமல் சென்றது.

இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், இருவரின் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்தி தப்பிய கார் ஓட்டுனரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us