ADDED : ஆக 09, 2024 12:23 AM
செங்குன்றம், மாதவரம், வடபெரும்பாக்கம் கன்னியம்மன் கோவில் அருகே, வளசரவாக்கத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர், டைல்ஸ் பாலிஷ் செய்வதற்கு தேவையான மூலப்பொருள் தயாரிக்கும் ரசாயன நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
ரசாயனம் தயாரிக்கும் பணியில் உள்ளூர் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று, இயந்திரத்தின் வாயிலாக பேரலில் ரசாயனத்தை நிரப்பும்போது, திடீரென கசிவு ஏற்பட்டது.
இதில், அங்கீத், மேத்யூ என்ற இரண்டு வடமாநில தொழிலாளிகள் கசிந்த திரவத்திலேயே வழுக்கி விழுந்தனர். கீழே விழுந்ததில் அவர்களின் உடல் முழுதும் திரவம் மெழுகுபோல் ஒட்டிக் கொண்டதால், அவர்கள் அங்கேயே மயங்கி விழுந்தனர். உடனடியாக சக ஊழியர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்சில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.