sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கார் மீது பைக் மோதல் மாணவர்கள் இருவர் பலி

/

கார் மீது பைக் மோதல் மாணவர்கள் இருவர் பலி

கார் மீது பைக் மோதல் மாணவர்கள் இருவர் பலி

கார் மீது பைக் மோதல் மாணவர்கள் இருவர் பலி


ADDED : ஜூன் 02, 2024 12:24 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேளச்சேரி,

ஆதம்பாக்கம், மேட்டுக்கழனி தெருவைச் சேர்ந்தவர் ரோஹித், 19. ஆதம்பாக்கம், கரிகாலன் தெருவைச் சேர்ந்தவர் ஷாம்ரவி, 18. நண்பர்களான இருவரும், துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில், பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு, வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, மோட்டார் பைக்கில் பள்ளிக்கரணை நோக்கி புறப்பட்டனர். ஷாம்ரவி வாகனத்தை ஓட்ட, ரோஹித் பின்னால் அமர்ந்திருந்தார்.

வேளச்சேரி மேம்பாலம் ஏறிச் செல்லும்போது, அசோக் சொக்கலிங்கம், 49, என்பவரின் கார் பழுதாகி சாலையின் மையப்பகுதியில் நின்றிருந்ததால், அதிவேகமாக சென்ற பைக் அந்த காரின் மீது மோதியது. இதில், இருவரும் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

வேளச்சேரி போக்குவரத்து போலீசார், இருவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். காயம் தீவிரமாக இருந்ததால், அங்கிருந்து அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

நள்ளிரவு சிகிச்சை பலனின்றி ஷாம்ரவி பலியானார். நேற்று அதிகாலை, ரோஹித் இறந்தார். சம்பவம் தொடர்பாக, கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார், கார் ஓட்டுனர் அசோக் சொக்கலிங்கத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us