sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திட்டமிடாமல் கட்டிய கழிப்பறை மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம்

/

திட்டமிடாமல் கட்டிய கழிப்பறை மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம்

திட்டமிடாமல் கட்டிய கழிப்பறை மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம்

திட்டமிடாமல் கட்டிய கழிப்பறை மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம்


ADDED : ஜூன் 27, 2024 12:31 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லிவாக்கம்,

சென்னை, அண்ணா நகர் மண்டலம், 95வது வார்டில் வில்லிவாக்கம், நியூ ஆவடி சாலை உள்ளது. இதில், இருபுறங்களில் உள்ள சாலையை விரிவாக்கம் செய்ய, மாநகராட்சியின் பேருந்து சாலைத் துறை முடிவு செய்துள்ளது.

இதற்கான ஒருபுறம் 20 அடியும், மற்றொருபுறம் 10 அடியும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதில், 20 அடி விரிவாக்கம் செய்யவுள்ள இடத்தில், மாநகராட்சிக்கு சொந்தமான ஆட்டுத்தொட்டி செயல்படுகிறது.

விரிவாக்கம் செய்யப்பட உள்ள ஆட்டுத்தொட்டியின் இடத்தில், சில மாதங்களுக்கு முன், மாநகராட்சி சார்பில், பல லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கழிப்பறை கட்டப்பட்டது.

இதை திறந்ததில் இருந்து, மக்கள் பயன்பாட்டிற்கு விடாமலும் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இதன் அருகில், மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட சிறிய கழிப்பறை ஒன்றும், பல ஆண்டுகளாக பயன்பாட்டின்றி கிடக்கிறது.

இடங்களை முறையாக அதிகாரிகள் ஆய்வு செய்யாமல், சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ள இடத்தில் கழிப்பறை கட்டியுள்ளனர். இதனால், மக்களின் வரிப்பணம் வீணாகிறது.

இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us