sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பாதுகாப்பற்ற மாம்பலம் ரயில் நிலையம் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதால் பீதி

/

பாதுகாப்பற்ற மாம்பலம் ரயில் நிலையம் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதால் பீதி

பாதுகாப்பற்ற மாம்பலம் ரயில் நிலையம் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதால் பீதி

பாதுகாப்பற்ற மாம்பலம் ரயில் நிலையம் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதால் பீதி


ADDED : ஜூன் 07, 2024 12:39 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாம்பலம், மாம்பலம் ரயில் நிலையத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து, பயணியருக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகி உள்ளது.

சென்னை மாநகரின் பரபரப்பான ரயில் நிலையங்களில், மாம்பலம் ரயில் நிலையமும் ஒன்று.

இங்கு தினசரி, 2 லட்சம் பயணியர் வந்து செல்கின்றனர்.

இந்த ரயில் நிலையம், சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை உள்ள வழித்தடத்தின் இடையே அமைந்துள்ளது. இதன் அருகிலேயே தி.நகர், மேற்கு மாம்பலம், அசோக் நகர் ஆகிய பகுதிகள் அமைந்துள்ளதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் இந்த வழித்தடத்தில், மொபைல்போன் பறிப்பு மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருகின்றன.

தற்போது, சாதாரண நாட்களிலும் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில், மாம்பலம் ரயில் நிலைய சைக்கிள் நிறுத்தத்தில், இருவர் வெட்டப்பட்ட சம்பவம் அரங்கேறியது.

இந்நிலையில் நேற்று, ரயில் நிலையம் நகரும் படிக்கட்டில் ஏறிய இளைஞரின் கழுத்தில், பின்னால் வந்த மர்ம நபர் சிறிய கத்தியை வைத்து மிரட்டி, அவரது கையில் கத்தியால் கிழித்துவிட்டு, பணம் பறித்துச் சென்றார்.

இந்த சம்பவம் பட்டப்பகலில், பயணியர் அதிகமானோர் இருக்கும் போதே நடந்துள்ளது. ஆனால், ரயில்வே போலீசார் உள்ளிட்ட யாருமே கண்டுகொள்ளவில்லை.

அத்துடன், நடைமேடை மற்றும் நகரும் படிக்கட்டு ஆகிய இடங்களில், கண்காணிப்பு கேமராக்களும் இல்லை.

இதனால், மாம்பலம் ரயில் நிலையத்தில் பயணியருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகிஉள்ளது.

இதன் காரணமாக, இரவு நேரத்தில் புறநகர் ரயிலில் பயணிக்கவும் அச்சப்படும் நிலை உள்ளது.

ரயில்வே காவல் நிலையம்


கடந்த 2015ம் ஆண்டு புதிதாக மாம்பலம் ரயில் நிலையத்தில், மாம்பலம் ரயில்வே காவல் நிலையம் உருவாக்கப்பட்டது. இக்காவல் நிலையத்தின் கீழ் கோடம்பாக்கம் ரயில் நிலையம் முதல் மீனம்பாக்கம் ரயில் நிலையம் வரை உள்ள வழித்தடங்கள் வருகின்றன.

ஆனால் இது, உதவி ஆய்வாளர் பொறுப்பில் உள்ள காவல் நிலையமாக உள்ளது. தற்போது, தாம்பரம் ரயில் நிலைய ஆய்வாளர், மாம்பலம் காவல் நிலையத்தின் பொறுப்பு ஆய்வாளராக உள்ளார்.

இந்த காவல் நிலையத்தில், போதிய ஆட்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, மாம்பலம் ரயில்வே காவல் நிலையத்திற்கு ஆய்வாளரை நியமனம் செய்வதுடன், போதிய போலீசாரையும் நியமிக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இத்துடன், ரயில்வே பார்டர் சாலையில் மார்க்கெட் அருகே உள்ள ரயில் நிலையம் செல்லும் படிக்கட்டுகள் மற்றும் நகரும் படிக்கட்டு ஆகியவை, மாம்பலம் காவல் நிலைய எல்லையில் வருகின்றன.

இப்பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us