sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குப்பைமேடான வானகரம் மாவட்ட நிர்வாகம் அலட்சியம்

/

குப்பைமேடான வானகரம் மாவட்ட நிர்வாகம் அலட்சியம்

குப்பைமேடான வானகரம் மாவட்ட நிர்வாகம் அலட்சியம்

குப்பைமேடான வானகரம் மாவட்ட நிர்வாகம் அலட்சியம்


ADDED : மே 03, 2024 12:36 AM

Google News

ADDED : மே 03, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரம்பாக்கம், மாநகராட்சி மற்றும் ஊராட்சி எல்லையில் குவியும் பிளாஸ்டிக் குப்பையை அகற்றுவதுடன், ஊராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை, வளசரவாக்கம் மண்டலம், 150வது வார்டு அருணாச்சலம் நகரில், பாரதி சாலை உள்ளது. இச்சாலை சென்னை மாநகராட்சி மற்றும் வானகரம் ஊராட்சியின் எல்லைப் பகுதியில் உள்ளது.

போரூர், காரம்பாக்கம் பகுதிகளில் இருந்து வானகரம் மற்றும் போரூர் சுங்கச்சாவடி செல்ல, வாகன ஓட்டிகள் இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.

இச்சாலையில், வானகரம் ஊராட்சி எல்லையில், பிளாஸ்டிக், இதர குப்பை மற்றும் கழிவுகள் குவிக்கப்பட்டு உள்ளன. இந்த குப்பை முறையாக அகற்றப்படாததால், துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் நிலவுகிறது.

அத்துடன் பிளாஸ்டிக் குப்பை காற்றில் பறப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சில சமூக விரோதிகள் பிளாஸ்டிக் குப்பையை எரிப்பதால், பகுதி மக்கள் மூச்சு திணறலால் அவதிப்படுகின்றனர்.

மாநகராட்சி, ஊராட்சி எல்லை தவிர, வானகரம் ஊராட்சிக்கு உட்பட்ட பல சாலைகளில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் குப்பை குவிந்துள்ளன.

இது, வானகரம் ஊராட்சி எல்லையில், பிளாஸ்டிக் பொருட்கள் தடை முறையாக அமல்படுத்தாமல் ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதைக் காட்டுகிறது.

எனவே, குவிக்கப்பட்டுள்ள குப்பையை முறையாக அகற்றவும், ஊராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கவும், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us