sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நலச்சங்கங்களுடன் சேர்ந்து பணி த.மா.கா., வேணுகோபால் உறுதி

/

நலச்சங்கங்களுடன் சேர்ந்து பணி த.மா.கா., வேணுகோபால் உறுதி

நலச்சங்கங்களுடன் சேர்ந்து பணி த.மா.கா., வேணுகோபால் உறுதி

நலச்சங்கங்களுடன் சேர்ந்து பணி த.மா.கா., வேணுகோபால் உறுதி


ADDED : ஏப் 16, 2024 12:08 AM

Google News

ADDED : ஏப் 16, 2024 12:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம், தேசிய ஜனநாயக கூட்டணியின், ஸ்ரீபெரும்புதுார் தொகுதி, த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால், தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில், நேற்று ஓட்டு சேகரித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது:

லேசான மழை பெய்தாலே, பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகள், பாதாள சாக்கடை கழிவில் மிதக்கும் நிலைமை தான் உள்ளன.

தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் வாகனங்களை நிறுத்த இடமில்லாததால் உட்புற சாலைகளிலும், ஜி.எஸ்.டி., சாலையிலும் நிறுத்துகின்றனர்.

நான் வெற்றி பெற்றால், பல ஆண்டுகள் கோரிக்கையாக உள்ள, 'மல்டி லெவல்' வாகன நிறுத்தும் வசதி கொண்டு வருவேன்.

தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டும் அடிப்படை வசதிகளில் பின்தங்கியுள்ள பம்மல், அனகாபுத்துார், திருநீர்மலை, பீர்க்கன்காரணை, பெருங்களத்துார் பகுதிகளை மேம்படுத்துவேன்.

குடியிருப்போர் நலச்சங்கத்தினர், எந்த நேரத்திலும் என்னை அழைக்கலாம். தாம்பரம், பல்லாவரத்தில் நலச்சங்கங்களுடன் இணைந்து மக்கள் பணி செய்ய தயாராக உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us