sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கரடிபுத்துாரில் குவாரிக்கு எதிர்ப்பு வாக்காளர் அட்டை ஒப்படைப்பு

/

கரடிபுத்துாரில் குவாரிக்கு எதிர்ப்பு வாக்காளர் அட்டை ஒப்படைப்பு

கரடிபுத்துாரில் குவாரிக்கு எதிர்ப்பு வாக்காளர் அட்டை ஒப்படைப்பு

கரடிபுத்துாரில் குவாரிக்கு எதிர்ப்பு வாக்காளர் அட்டை ஒப்படைப்பு


ADDED : மார் 01, 2025 01:19 AM

Google News

ADDED : மார் 01, 2025 01:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி மாதர்பாக்கத்தை அடுத்த கரடிபுத்துார் கிராமத்தில், 5 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த நிலத்தில், அரசு சார்பில், தனியாருக்கு கிராவல் மண் குவாரிக்கு அனுமதி தரப்பட்டது.

கிராம சபை கூட்ட தீர்மானத்தை மீறியும், குவாரிக்கு அனுமதி அளித்ததற்கு, அப்பகுதி மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கடந்த மாதம் 24ம் தேதி, குவாரிக்கு அனுமதிக்கப்பட்ட இடத்தில், கிராவல் மண் எடுக்க வந்த பொக்லைன் எந்திரம் மற்றும் லாரிகளை, கிராம மக்கள் சிறைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கிராமத்தினர் 180க்கும் மேற்பட்டோர், ரேஷன் கார்டு, வாக்காளர் மற்றும் ஆதார் அடையாள அட்டைகளை ஏந்தியபடி, வி.ஏ.ஓ., அலுவலகம் நோக்கி ஊர்வலமாக நேற்று சென்று அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அனைவரது அடையாள அட்டைகளையும், வி.ஏ.ஓ., ஜான் பிரிட்டோவிடம் ஒப்படைத்தனர். கும்மிடிப்பூண்டி தாசில்தார் ராஜேந்திரன், இன்று கிராம மக்கள் மத்தியில் சமாதான பேச்சு நடத்த உள்ளார்.






      Dinamalar
      Follow us