/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீணாகி வரும் குடிநீர் அதிகாரிகள் மெத்தனம்
/
வீணாகி வரும் குடிநீர் அதிகாரிகள் மெத்தனம்
ADDED : மே 29, 2024 12:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி அடுத்த பட்டாபிராம், 20வது வார்டு தண்டரையில், வள்ளலார் நகர் பிரதான சாலை உள்ளது. இங்குள்ள வள்ளலார் நகர் 5வது தெருவில், ஆழ்துளைக் கிணறு அமைத்து, அப்பகுதியில் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வள்ளலார் நகர் 5வது இணைப்பு தெரு மற்றும் வள்ளலார் நகர் 7வது தெருவில், கடந்த சில மாதங்களாக குழாய் உடைந்துள்ளது. அப்பகுதி வாசிகள், நீர் கசியும் பகுதியில் துணி வைத்து அடைத்துள்ளனர். இருப்பினும், தினமும் குடிநீர் சாக்கடையில் வழிந்து வீணாகி வருகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் வீணாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.