sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போரூர் ஏரியை ஆக்கிரமித்த ஆகாய தாமரை நீர்வளத்துறை அதிகாரிகள் மவுனம்

/

போரூர் ஏரியை ஆக்கிரமித்த ஆகாய தாமரை நீர்வளத்துறை அதிகாரிகள் மவுனம்

போரூர் ஏரியை ஆக்கிரமித்த ஆகாய தாமரை நீர்வளத்துறை அதிகாரிகள் மவுனம்

போரூர் ஏரியை ஆக்கிரமித்த ஆகாய தாமரை நீர்வளத்துறை அதிகாரிகள் மவுனம்


ADDED : ஜூன் 18, 2024 12:31 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போரூர், போரூர் ஏரியில் குளிக்க சென்ற நபர், ஆகாய தாமரை செடிகளில் சிக்கி உயிரிழந்த நிலையிலும், ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற, நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

சென்னைக்கு மிக அருகில், மாநகராட்சி எல்லையில் போரூர் ஏரி உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு, போரூர் ஏரி துார் வாரப்பட்டு, 46 மில்லியன் கன அடி கொள்ளளவில் இருந்து, 70 மில்லியன் கன அடி நீரை சேமிக்கும் வகையில் ஆழப்படுத்தப்பட்டது.

மேலும், 2017ம் ஆண்டு இந்த ஏரிக்கரையில், 1.85 கோடி ரூபாய் செலவில், தற்காலிக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

இந்த சுத்திகரிப்பு நிலையம் வாயிலாக, தினசரி 40 லட்சம் லிட்டர் நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்பட்டது.

தற்போது, இந்த ஏரி முழுதும் ஆகாய தாமரை படர்ந்துள்ளது. இந்த செடிகளால், நீர்பரப்புக்கு ஆக்சிஜன், சூரிய ஒளி செல்வது தடைபட்டு நீர்வாழ் உயிரினங்கள், நன்மை தரும் செடிகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரையை அகற்ற வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இருந்தும் நீர் வளத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்தனர்.

இதன் விளைவாக, 15ம் தேதி ஏரியில் குளிக்க சென்ற நித்யானந்தம், 41, என்பவர், ஆகாய தாமரை செடியில் சிக்கி உயிரிழந்தார். ஆனால், இன்னும் ஏரியில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆர்.கே.ரவிச்சந்திரன், 69, கூறுகையில், போரூர் ஏரியை துார் வார வேண்டும். அதேபோல், தெள்ளியார் அகரம் அருகே ஏரிகரை அமைக்க வேண்டும். தற்கொலை மற்றும் குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும்.

ஆகாய தாமரையை அகற்ற தொடர்ந்து வலியுறுத்தியும், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை,'' என்றார்.






      Dinamalar
      Follow us