/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சாரம் பாய்ந்து வெல்டர் உயிரிழப்பு
/
மின்சாரம் பாய்ந்து வெல்டர் உயிரிழப்பு
ADDED : மே 31, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவேற்காடு, மாங்காடு, பரணி புத்துரைச் சேர்ந்தவர் அப்துல் நசீர், 38; வெல்டர்.
இவர் ஒரு வாரமாக, திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி சவீதா பல் மருத்துவக் கல்லுாரியில், 'வாட்டர் ட்ரீட்மென்ட் பிளான்ட் ஷெட்' அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில், அப்துல் நசீர், வெல்டிங் செய்து கொண்டிருந்த போது, திடீரென மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.