sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆவடியில் ராணுவ வீரரை கொன்ற மனைவி கைது

/

ஆவடியில் ராணுவ வீரரை கொன்ற மனைவி கைது

ஆவடியில் ராணுவ வீரரை கொன்ற மனைவி கைது

ஆவடியில் ராணுவ வீரரை கொன்ற மனைவி கைது


ADDED : ஜூலை 09, 2024 12:08 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 12:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி,

ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டை, ராணுவ குடியிருப்பைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி தாஸ், 38; இந்திய ராணுவ வீரர்.

இவர், கடந்த மே 10ம் தேதி இரவு, அதீத மது போதையில், படுக்கை அறையில் படுத்திருந்தார். அவரது மனைவி லீமா ரோஸ் மேரி, 36, அவரை மீட்டு, ஆவடி ராணுவ மருத்துவமனையில் சேர்த்த போது, அவர் இறந்தது தெரிந்தது.

ஆவடி முத்தா புதுப்பேட்டை போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், வேளாங்கண்ணி தாஸ் கழுத்தில் காயம் இருப்பது தெரிந்தது. அதன் அடிப்படையில், அவரதுமனைவி லீமா ரோஸ் மேரியை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம்:

என் கணவர், தினமும் மது போதையில் வீட்டிற்கு வந்து, என்னிடம் தகராறில் ஈடுபட்டார். என் பெற்றோரையும் அவதுாறாக பேசினார்.

இதனால் ஆத்திரமடைந்த நான், சம்பவ தினத்தன்று மது போதையில் படுத்திருந்த அவரை, புடவையால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.

இவ்வாறு, வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து ஆவடி முத்தா புதுப்பேட்டை போலீசார், லீமா ரோஸ் மேரியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us