sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

படுக்கையில் பிளம்பர் அரசு உதவிக்கரம் நீட்டுமா?

/

படுக்கையில் பிளம்பர் அரசு உதவிக்கரம் நீட்டுமா?

படுக்கையில் பிளம்பர் அரசு உதவிக்கரம் நீட்டுமா?

படுக்கையில் பிளம்பர் அரசு உதவிக்கரம் நீட்டுமா?


ADDED : ஜூலை 11, 2024 12:44 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயனாவரம், அயனாவரம், பச்சைகல் வீராசாமி தெருவில் உள்ள அரசின் வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் வசிப்பவர் ரமேஷ், 42; பிளம்பர். இவருக்கு திருமணமாகி, ஒரு மகன் உள்ளார். ரமேஷ் கடந்த 2014ல் கொருக்குபேட்டையில் தனியார் இடத்தில் பணிபுரியும் போது, மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இந்த விபத்தில், ரமேஷுக்கு முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டதில், இடுப்பு பகுதிக்கு கீழ் உறுப்புகள் செயலிழந்தன. இதனால், கடந்த 10 ஆண்டுகளாக, படுத்தப்படுக்கையாக எந்தவித வருமானமின்றி தவிக்கிறார்.

இதுகுறித்து ரமேஷ் கூறியதாவது:

கடந்த 2014ல் ஏற்பட்ட விபத்தில் இடுப்பிற்கு கீழ் செயலிழுந்தது. என் சம்பளத்தை நம்பியே குடும்பம் இருந்தது. எனக்கு காயம் ஏற்பட்டபின், எனது மனைவி என்னைவிட்டு சென்றுவிட்டார். கட்டிலிலேயே 10 ஆண்டுகளாக என் வாழ்க்கை சென்றுக்கொண்டிருக்கிறது.

பிழைப்புக்கு எந்த வழியின்றியும், வயதான தாய் - தந்தை மற்றும் அரசு பள்ளியில் படிக்கும் மகனுடன் தவிக்கிறேன். தற்போது வசிக்கும் குடியிருப்பும், விரைவில் இடிக்கப்பட உள்ளதாக கூறுகின்றனர். ஏதேனும் அரசின் உதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினர்.

ரமேஷுக்கு உதவ விரும்புவோர், 89251 00145 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us