ADDED : செப் 07, 2024 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர், செப். 7-
திருவொற்றியூர் மேற்கு, ஏழாவது வார்டில், அண்ணா நகர், அண்ணாமலை நகர் உட்பட, 20க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன. இப்பகுதிக்கு குழாய், லாரி வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த 15 நாளாக குடிநீர் வினியோகம் செய்யாததால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள், கே.சி.பி., சாலையில், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த சாத்தாங்காடு போலீசார், குடிநீர் வாரிய அதிகாரிகள், இவர்களிடம் சமாதானம் பேசினர். அதன் பின் கலைந்தனர்.