sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

/

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 22, 2025 12:31 AM

Google News

ADDED : பிப் 22, 2025 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர் திருவொற்றியூர், இந்திரா நகர் பகுதியில், மத்திய அரசுக்கு சொந்தமான 'கான்கார்ட்' எனும் சரக்கு பெட்டக முனையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, நிரந்தரம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில், 500 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

இந்த நிறுவனத்தில், 25 ஆண்டுகளாக சுமை துாக்கும் பணி செய்து வந்த 14 ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் காவலாளி ஒருவர் என, 15 பேரை, நிர்வாகம் திடீரென பணி நீக்கம் செய்தது.

இது குறித்து, விளக்கம் கேட்டபோது, சமூகத்தை காரணம் காட்டி இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து, சென்னை பெருநகர பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

மீண்டும் பணி வழங்க கோரியும்,இழிவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கையில் பதாகைகளுடன், அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். அவர்களிடம் போலீசார் சமாதாரம் பேசி, கலைந்து போக செய்தனர்.






      Dinamalar
      Follow us