ADDED : மே 03, 2024 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல், அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் கமலேஷ், 29. கடந்த மாதம், அதே பகுதியில், அடிதடி வழக்கில் கைதாகி, புழல் சிறையில், விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு, நேற்று காலை திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உடல் நலம் பாதிக்கப்பட்டது.
ஆம்புலன்ஸ் வாயிலாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.