ADDED : ஆக 02, 2024 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன், 29. இவர், குன்றத்துார், சுப்புலட்சுமி நகரில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, பாலமுருகன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, மொபைல் போனிற்கு சார்ஜ் போட மின் இணைப்பு கொடுத்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். குன்றத்துார் போலீசார், உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.