ADDED : மார் 10, 2025 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி அடுத்த சேக்காடு, அண்ணா நகரைச் சேர்ந்தவர் விமலன், 18; 'காஸ்' நிறுவன ஊழியர்.
இவர், நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து இந்து கல்லுாரி ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது, சென்னை சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். நேற்று தகவலறிந்த ஆவடி ரயில்வே போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.