sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பிறந்த நாளுக்கு மாணவியரை அழைத்த வாலிபர் கைது

/

பிறந்த நாளுக்கு மாணவியரை அழைத்த வாலிபர் கைது

பிறந்த நாளுக்கு மாணவியரை அழைத்த வாலிபர் கைது

பிறந்த நாளுக்கு மாணவியரை அழைத்த வாலிபர் கைது


ADDED : செப் 02, 2024 01:35 AM

Google News

ADDED : செப் 02, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அசோக் நகர்,:தி.நகர் காவல் மாவட்டத்தைச் சேர்ந்த, அரசு பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவியர், 'இன்ஸ்டாகிராம்' வாயிலாக வாலிபர் ஒருவருடன் பழகியுள்ளனர்.

வாலிபரின் பிறந்தநாள் வந்த நிலையில், விழாவில் பங்கேற்க கடந்த 29ம் தேதி எண்ணுார் சென்றுள்ளனர்.

வீட்டில் கூறாமல் சென்றதால், மாணவியரின் பெற்றோர் பதற்றம் அடைந்து, அசோக்நகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

விசாரணையில், மாணவியர் எண்ணுாரில் இருக்கும் தகவல் தெரிந்து, போலீசார் அங்கு சென்று அழைத்து வந்தனர்.

பின், அவர்களுக்கு அறிவுரை கூறி, பெற்றோருடன் அனுப்பினர்.

இந்நிலையில், மாணவியரை அழைத்து பிறந்த நாள் கொண்டாடியது, மணலியைச் சேர்ந்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர் தருண், 19, என தெரிந்தது. அவரை 'போக்சோ' வழக்கில் கைது செய்தனர். மாணவியருக்கு பாலியல் தொந்தரவு தராததால், பின்னர் அவரை போலீஸ் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us