sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்டு கஞ்சா அடித்த 10 பேர் கைது

/

ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்டு கஞ்சா அடித்த 10 பேர் கைது

ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்டு கஞ்சா அடித்த 10 பேர் கைது

ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்டு கஞ்சா அடித்த 10 பேர் கைது


ADDED : ஜூலை 15, 2025 12:44 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஒட்டலில் ரூம் போட்டு, கஞ்சா பயன்படுத்தி வந்த 10 பேரை, போலீசார் கைது செய்து உள்ளனர்.

சென்னை, பட்டினப்பாக்கத்தில், 'சோமர் செட்' என்ற நட்சத்திர ஓட்டல் உள்ளது. இங்கு தங்கியுள்ள சிலர் கஞ்சா பயன்படுத்தி வருவதாக, ஓட்டல் மேலாளர், பட்டினப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

பட்டினப்பாக்கம் போலீசாரும், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரும், அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

சூளையைச் சேர்ந்த ஜெகதீஸ்வர், 34, கொளத்துாரை சேர்ந்த சந்தோஷ், 27, தீபக், 27 உட்பட, 10 பேர் கஞ்சா பயன்படுத்தியது தெரியவந்தது.

அவர்களை கைது செய்த போலீசார், 5 கிராம் கஞ்சா, 48 மில்லி கிராம் ஓ.ஜி., கஞ்சா, 11 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:

கைதான ஜெகதீஷ்வரன் சில நாட்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். அதற்காக, நண்பர்களுக்கு நட்சத்திர ஓட்டலில் விருந்து அளித்துள்ளார். அப்போது, கஞ்சா பயன்படுத்தியுள்ளனர்.

இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தது யார்; யார், யாருடன் மொபைல் போனில் பேசியுள்ளனர். போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்றெல்லாம் விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

***






      Dinamalar
      Follow us