ADDED : ஏப் 07, 2026 10:05 PM
அ நிறம் | அளவு
சென்னை:தமிழகத்தில், பல்வேறு நகரங்களில், கடந்த சில வாரங்களாக, வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில், 11 நகரங்களில் வெயில் சதமடித்தது. நேற்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக வேலுாரில், 108 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 42.2 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, ஈரோடு, கரூர் பரமத்தி நகரங்களில், தலா, 105 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 41 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
நாமக்கல், திருப்பத்துார், தர்மபுரி, மதுரை, திருச்சி, திருத்தணி, பாளையங்கோட்டை, சேலம் ஆகிய நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல், வெயில் பதிவானது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
***
