/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அனகாபுத்துாரில் 120 வீடுகள் இடித்து அகற்றம்
/
அனகாபுத்துாரில் 120 வீடுகள் இடித்து அகற்றம்
ADDED : மே 24, 2025 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனகாபுத்துார் :அனகாபுத்துாரில், அடையாறு ஆற்றங்கரை ஓரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடித்து அகற்றும் பணி, மே, 20ல் துவங்கி, தொடர்ந்து நடந்து வருகிறது.
ஒவ்வொரு நாளும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் வரை, 280 வீடுகள் இடிக்கப்பட்டன. நான்காம் நாளான நேற்று, 'பொக்லைன்' வாகனங்களால், 120 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.