sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

150 ஆண்டு பழமையான 'ஸ்தல விருட்சம்' முழுமையாக அகற்றப்படாது: ஐகோர்ட்

/

150 ஆண்டு பழமையான 'ஸ்தல விருட்சம்' முழுமையாக அகற்றப்படாது: ஐகோர்ட்

150 ஆண்டு பழமையான 'ஸ்தல விருட்சம்' முழுமையாக அகற்றப்படாது: ஐகோர்ட்

150 ஆண்டு பழமையான 'ஸ்தல விருட்சம்' முழுமையாக அகற்றப்படாது: ஐகோர்ட்


ADDED : ஏப் 06, 2025 12:28 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள பார்வதி அம்மன் கோவிலில் நிற்கும், 150 ஆண்டு பழமையான மரம் முழுமையாக அகற்றப்பட மாட்டாது என, ஹிந்து அறநிலையத்துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனு:

பழைய வண்ணாரப்பேட்டை, மணிகண்டன் 3வது தெருவில், அருள்மிகு பார்வதி அம்மன் கோவில் உள்ளது. கோவிலும், அங்குள்ள 'ஸ்தல விருட்சமும்' மிகவும் பழமையானது.

தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் மக்கள் வந்து செல்லும் இந்த கோவிலில், 17.30 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்ய இருப்பதாக, ஹிந்து அறநிலையத்துறை அறிவித்தது.

திருப்பணி என்ற பெயரில், கோவிலின் ஸ்தல விருட்சமான 150 ஆண்டு பழமையான ஆலமரத்தை அகற்ற முடிவு செய்துள்ளனர். எனவே, பழமையான அந்த ஆலமரத்தை அகற்ற தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் ஆஜராகி, ''பழமையான கோவிலை இடித்து, புது கோவில் கட்டும் பணி தொடர்பாக அரசாணை, கடந்தாண்டு செப்., 10ல் வெளியிடப்பட்டு உள்ளது. கோவில் ஸ்தல விருட்சமான ஆலமரத்தை, அப்பகுதி மக்கள் புனிதமாக கருதுவதால், அதை அகற்றக்கூடாது,'' என்றார்.

ஹிந்து அறநிலையத்துறை தரப்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ''கோவில் மதில் சுவரில், மரத்தின் வேர்கள் ஊடுருவி உள்ளன. புதிய கோவில் கட்டுவதற்கு, மரத்தின் குறிப்பிட்ட பகுதி மட்டுமே அகற்றப்படும். பசுமையான சூழலைப் பாதுகாப்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விழிப்புடன் உள்ளனர். ஸ்தல விருட்சமான அந்த மரம் அழியாமல் இருக்க, அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்,'' என்றார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இந்த கோவிலின் பழமையான ஸ்தல விருட்சத்தை வெட்டும் முடிவுக்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக, கடந்த மாதம் நம் நாளிதழில் செய்தி வெளியானது குறிப்பிடப்பட்டது.






      Dinamalar
      Follow us