தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தபால் சேவை குறைகளுக்கு 15ல் தீர்வு

தபால் சேவை குறைகளுக்கு 15ல் தீர்வு

தபால் சேவை குறைகளுக்கு 15ல் தீர்வு


ADDED : செப் 01, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2026 07:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தபால் துறை சார்பில், சென்னை மண்டல அளவிலான வாடிக்கையாளர் குறைதீர் முகாம், வரும் 15ல் காலை 11:30 மணிக்கு நடக்கவுள்ளது.

சென்னை, அண்ணா சாலையில் உள்ள மண்டல அலுவலக முதுநிலை கண்காணிப்பு அலுவலகத்தில் நடக்கும் முகாமில், தபால் துறை தயாரிப்புகள், சேவைகள் தொடர்பான தனிப்பட்ட குறைகள் விசாரிக்கப்பட்டு தீர்வு அளிக்கப்படும்.

பணவிடை எனும் மணி ஆர்டர், மதிப்புமிக்க பார்சல், காப்பீடு செய்யப்பட்ட தபால், விரைவு தபால் தொடர்பான புகார்களில், அவை பதிவு செய்யப்பட்ட அலுவலக விபரங்களையும் குறிப்பிட வேண்டும். புதிய புகார்களுக்கு அனுமதி இல்லை.

உறையின் மீது ‘மண்டல குறைதீர்ப்பு முகாம்’ என குறிப்பிட வேண்டும். புகார்களை விரைவு தபாலில் மட்டும், ‘உதவி இயக்குநர், தபால் அலுவலக முதுநிலை கண்காணிப்பு அலுவலகம், சென்னை நகர மண்டலம், சென்னை – 600 002’ என்ற முகவரிக்கு, 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். pg.chennaicity@indiapost.gov.in என்ற மின்னஞ்சலிலும் அனுப்பலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us