ADDED : செப் 01, 2026 07:42 PM
சென்னை: தபால் துறை சார்பில், சென்னை மண்டல அளவிலான வாடிக்கையாளர் குறைதீர் முகாம், வரும் 15ல் காலை 11:30 மணிக்கு நடக்கவுள்ளது.
சென்னை, அண்ணா சாலையில் உள்ள மண்டல அலுவலக முதுநிலை கண்காணிப்பு அலுவலகத்தில் நடக்கும் முகாமில், தபால் துறை தயாரிப்புகள், சேவைகள் தொடர்பான தனிப்பட்ட குறைகள் விசாரிக்கப்பட்டு தீர்வு அளிக்கப்படும்.
பணவிடை எனும் மணி ஆர்டர், மதிப்புமிக்க பார்சல், காப்பீடு செய்யப்பட்ட தபால், விரைவு தபால் தொடர்பான புகார்களில், அவை பதிவு செய்யப்பட்ட அலுவலக விபரங்களையும் குறிப்பிட வேண்டும். புதிய புகார்களுக்கு அனுமதி இல்லை.
உறையின் மீது ‘மண்டல குறைதீர்ப்பு முகாம்’ என குறிப்பிட வேண்டும். புகார்களை விரைவு தபாலில் மட்டும், ‘உதவி இயக்குநர், தபால் அலுவலக முதுநிலை கண்காணிப்பு அலுவலகம், சென்னை நகர மண்டலம், சென்னை – 600 002’ என்ற முகவரிக்கு, 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். pg.chennaicity@indiapost.gov.in என்ற மின்னஞ்சலிலும் அனுப்பலாம்.
