ADDED : ஜூலை 01, 2026 02:07 AM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னையில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த, 8 பேர் உட்பட, 18 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
அதன்படி நேற்று காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருள்மணி, வண்ணாரப்பேட்டை சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கும், திருநாவுக்கரசு ஐஸ்ஹவுஸ் சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கும், நுண்ணறிவு பிரிவில் இருந்த ராதாகிருஷ்ணன் தேனாம்பேட்டை சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கும் என, 18 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை, சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பிறப்பித்தார்.
