sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கூவம் ஆற்றில் கழிவுநீரை விடும் லாரிகளுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.,யுடன் ரூ.29,500 அபராதம்

/

கூவம் ஆற்றில் கழிவுநீரை விடும் லாரிகளுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.,யுடன் ரூ.29,500 அபராதம்

கூவம் ஆற்றில் கழிவுநீரை விடும் லாரிகளுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.,யுடன் ரூ.29,500 அபராதம்

கூவம் ஆற்றில் கழிவுநீரை விடும் லாரிகளுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.,யுடன் ரூ.29,500 அபராதம்


ADDED : செப் 25, 2024 12:04 AM

Google News

ADDED : செப் 25, 2024 12:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, கூவம் ஆற்றில் கழிவுநீரை விடும் லாரிகளுக்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி.,யுடன் 29,500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக, தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

'டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், பகல் நேரத்திலேயே சென்னை முகப்பேர் பாலத்திலிருந்து கூவம் ஆற்றில் விடப்படுகிறது.

இதனால் கூவம் ஆறு மாசடைகிறது. சென்னை நதி மறுசீரமைப்பு அறக்கட்டளை பல நுாறு கோடி ரூபாய் செலவில், கூவம் ஆற்றை துாய்மைப்படுத்த எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுவதில்லை' என, நாளிதழ்களில் செய்தி வெளியானது.

அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் விசாரித்தது. இப்பிரச்னையில், அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை குடிநீர் வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகளுக்கு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், தீர்ப்பாயத்தில் சென்னை குடிநீர் வாரியம் தாக்கல் செய்த அறிக்கை:

சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை சட்டவிரோதமாக, சென்னை, முகப்பேர் பாலத்திலிருந்து கூவம் ஆற்றில் விட்ட டேங்கர் லாரி, திருமங்கலம் காவல் நிலையத்தாரால் கண்டுபிடிக்கப்பட்டது. அண்ணா நகரில் இருந்து ஆழ்துளை கிணறு கசடுகள் அந்த லாரியில் கொண்டு வரப்பட்டு, கூவம் ஆற்றில் கொட்டப்பட்டது தெரிய வந்தது.

செப்டிக் டேங்க் கழிவுகள், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை, அதற்கென அனுமதிக்கப்பட்ட இடங்கள் தவிர வேறு இடங்களில், குறிப்பாக நீர்நிலைகளில் விட்டால் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

அதன்படி முகப்பேர் பாலத்தில் பிடிப்பட்ட லாரியின் உரிமையாளருக்கு 25,000 ரூபாய் அபராதம், 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி 4,500 ரூபாய் சேர்த்து, 29,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. லாரி உரிமையாளர் மன்னிப்பு கடிதம் கொடுத்து, அபராதம் செலுத்தியுள்ளார்.

சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள வீடுகளின் செப்டிக் டேங்க் கழிவுகளை, 14420 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, பதிவு செய்து அகற்ற வேண்டும்.

வானகரம், அயனப்பாக்கம், அம்பத்துார், நுாம்பல், முகப்பேர், நெற்குன்றம், காட்டுப்பாக்கம், நொளம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து, முகப்பேர் கழிவுநீர் உந்து நிலையத்திற்கு கழிவுநீரை கொண்டு செல்ல, 31 லாரிகள் பயன்பாட்டில் உள்ளன.

இதையும் மீறி நீர்நிலைகளில், பொது இடங்களில் கழிவுநீர் விடப்படும் லாரிகள் 'சிசிடிவி' கேமரா வாயிலாக கண்காணிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us