/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காவலர் குறைதீர் முகாம் கமிஷனரிடம் 185 பேர் மனு
/
காவலர் குறைதீர் முகாம் கமிஷனரிடம் 185 பேர் மனு
ADDED : நவ 12, 2025 12:18 AM

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று நடந்த காவலர் குறைதீர் முகாமில் 185 பேர், கமிஷனர் அருணிடம் மனு அளித்தனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், காவலர் குறைதீர் சிறப்பு முகாம், நேற்று நடந்தது. இதில் சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு, ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த, இரு உதவி கமிஷனர்கள், 14 ஆய்வாளர்கள், 37 எஸ்.ஐ.,க்கள் உட்பட, 185 பேரிடம், கமிஷனர் அருண் குறைகளை கேட்டறிந்தார். அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
பணி மாறுதல், தண்டனை நீக்குதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு உள்ளிட்ட மனுக்கள் வழங்கப்பட்டன. பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.
இம்முகாமில், கூடுதல் கமிஷனர் விஜயேந்திரபிதாரி, துணை கமிஷனர்கள் ஹரிகிரன் பிரசாத், சுப்புலட்சுமி, கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

