ADDED : ஜன 05, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அதன்படி கடந்த ஒரு வாரத்தில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 2 பெண்கள் உட்பட, 20 பேரை, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். நடப்பாண்டில் திருட்டு, வழிப்பறி, பண மோசடியில் ஈடுபட்ட, 121 குற்றவாளிகள் உட்பட, 714 பேர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.