/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாதுகாப்பாக பொங்கல் கொண்டாட கடற்கரையில் 2,000 போலீசார்
/
பாதுகாப்பாக பொங்கல் கொண்டாட கடற்கரையில் 2,000 போலீசார்
பாதுகாப்பாக பொங்கல் கொண்டாட கடற்கரையில் 2,000 போலீசார்
பாதுகாப்பாக பொங்கல் கொண்டாட கடற்கரையில் 2,000 போலீசார்
ADDED : ஜன 13, 2024 12:06 AM
சென்னை பொங்கல் பண்டிகை விடுமுறை, வார இறுதி நாட்கள் என, தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையின் சுற்றுலா தலங்களான மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் ஏராளமானோர் குவிவர்.
எனவே, பாதுகாப்பு கருதி மெரினா மற்றும் பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் தடுப்பு அமைக்கப்பட்டு, யாரும் கடலில் இறங்கி குளிக்கதாவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதேபோல, போலீஸ் துணை கமிஷனர், உதவி கமிஷனர்கள் இருவர் மற்றும் ஐந்து இன்ஸ்பெக்டர்கள், சப் - இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என, 2000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் 'ட்ரோன்' வைத்தும் கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர்.
ஆவடியில் 3,000
பொங்கல் பண்டிகையை கொண்டாட, சென்னையின் பல பகுதிகளில் இருந்தும், சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக, அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. பயணியரின் பாதுகாப்பிற்காக, சிறப்பு பேருந்து நிலையங்கள், போலீசாரின் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.
வரும், நான்கு நாட்களுக்கு, ஆவடி மாநகர போலீஸ் கமிஷனரக எல்லைக்குள், 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மக்கள், பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு, பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்றார்.