/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு
/
210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு
ADDED : ஆக 23, 2025 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னைதிருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் மின் வாரியத்திற்கு, வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது.
அங்கு தலா, 210 மெகா வாட் திறனில், மூன்று அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம், சென்னையின் மின் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், வட சென்னை மின் நிலையத்தின் மூன்றாவது அலகில் பழுது காரணமாக நேற்று முன் தினம் இரவு முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.