ADDED : ஜன 29, 2024 01:21 AM
அ நிறம் | அளவு
சென்னை:சென்னை அடுத்த அத்திப்பட்டில், மின் வாரியத்திற்கு வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு தலா, 210 மெகாவாட் திறனில் மூன்று அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த மின்சாரம், சென்னையின் மின்தேவையை பூர்த்தி செய்கின்றது.
இந்நிலையில், வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரண்டாவது அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக, நேற்று முன்தினம் இரவு முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், 210 மெகாவாட் மின்சாரம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
