/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காவலர் குறைதீர் முகாமில் 245 பேர் மனு
/
காவலர் குறைதீர் முகாமில் 245 பேர் மனு
ADDED : டிச 10, 2025 05:37 AM

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று நடந்த காவலர் குறைதீர் முகாமில், 245 பேர் கூடுதல் கமிஷனர் விஜயேந்திர பிதாரியிடம் மனு அளித்தனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தி ல், நேற்று காவலர் குறைதீர் சிறப்பு முகாம் நடந்தது.
இதில் சட்டம் - ஒழுங்கு, குற்றப் பிரிவு, போக்குவரத்து பிரிவு, ஆயுத ப்படை மற்றும் சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த, இரண்டு உதவி கமிஷனர்கள், 14 ஆய்வாளர்கள், 19 எஸ்.ஐ.,க்கள் உட்பட, 245 பேரிடம் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடம் இருந்து மனுக் களை கூடுதல் போலீஸ் கமிஷனர் விஜயேந்திர பிதாரி பெற்றார்.
கொடுக்கப்பட்ட மனுக்களில், பணிமாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு க ளைதல் உள்ளிட்ட மனுக்க ள் இருந்தன.
பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கூடுதல் கமிஷனர் விஜயே ந்திர பிதாரி உத்தரவிட்டார்.
இம்முகாமில் துணை கமிஷனர்கள், சுப்புலட்சுமி , கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர் .

