sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போலீஸ்காரரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி

/

போலீஸ்காரரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி

போலீஸ்காரரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி

போலீஸ்காரரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி


ADDED : அக் 30, 2024 12:14 AM

Google News

ADDED : அக் 30, 2024 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்தவர் சத்தியமூர்த்தி, 27. இவர், அரசியல் கட்சி ஒன்று நடத்திய மாநாட்டின் பாதுகாப்பு பணிக்காக, தன் இருசக்கர வாகனத்தில் 26ம் தேதி சென்றார். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி அடுத்த அய்யூர், அகரம் மேம்பாலம் அருகில் எதிர்பாராதவிதமாக கார் மோதிய விபத்தில், பலத்த காயம் அடைந்தார்.

சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த நிலையில், போலீஸ்காரரின் இறப்பு அறிந்து முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:

இந்த துயரமான செய்தியை கேட்டு மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். சத்தியமூர்த்தியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றும் போலீசாருக்கும், என் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன். சத்தியமூர்த்தியின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய், நிவாரண நிதியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us