/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு 27 பேரை ஆஜர்படுத்த உத்தரவு
/
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு 27 பேரை ஆஜர்படுத்த உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு 27 பேரை ஆஜர்படுத்த உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு 27 பேரை ஆஜர்படுத்த உத்தரவு
ADDED : ஜூன் 17, 2025 12:59 AM
சென்னை, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்தாண்டு ஜூலை 5ல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ரவுடி நாகேந்திரன், அவரின் மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உட்பட 27 பேரை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், 27 பேருக்கும் குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் வழங்கப்பட்டன. இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நாகேந்திரன், அஸ்வத்தாமன் உள்ளிட்ட 27 பேர், சிறையில் இருந்தவாறே வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சிலர், தங்களை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி, ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தனர். மேலும் சிலர் நேற்று மனு தாக்கல் செய்தனர். சிலர் விடுவிக்க கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரினர்.
இதற்கு அனுமதி அளித்த நீதிபதி எஸ்.கார்த்திகேயன், குற்றம் சாட்டப்பட்ட 27 பேரையும், ஜூன் 30ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த, காவல்துறைக்கு உத்தரவிட்டு, விடுவிக்க கோரும் மனுக்களை தாக்கல் செய்யவும் அவகாசம் வழங்கி, விசாரணையை தள்ளிவைத்தார்.