sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கால்வாயில் சாம்பல் அகற்ற ரூ.28 கோடி

/

கால்வாயில் சாம்பல் அகற்ற ரூ.28 கோடி

கால்வாயில் சாம்பல் அகற்ற ரூ.28 கோடி

கால்வாயில் சாம்பல் அகற்ற ரூ.28 கோடி


ADDED : அக் 29, 2024 12:10 AM

Google News

ADDED : அக் 29, 2024 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,பகிங்ஹாம் கால்வாயில் நிலக்கரி சாம்பல் கழிவுகளை அகற்றும் பணிக்கு, மின் வாரியம், 28 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில், மின் வாரியத்திற்கு சொந்தமான வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது.

இங்கு, மின் உற்பத்திக்கு எரி பொருளாக நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. மின் உற்பத்திக்கு பின் வெளியேறும் நிலக்கரி உலர் சாம்பல், பகிங்ஹாம் கால்வாய் அருகில் கொட்டி வைக்கப்படுகிறது.

இது, பகிங்ஹாம் கால்வாயில் பரவி நீரோட்டத்தையும், சுற்றுச்சூழலையும் பாதித்து வருகிறது.

இதனால், எண்ணுாரில் முகத்துவார அடைப்பால் கடலுக்கு செல்ல முடியாமல் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

இதற்கு மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பகிங்ஹாம் கால்வாயை ஆக்கிரமித்துள்ள நிலக்கரி சாம்பலை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இப்பணிக்கு நிதி வழங்கி, மின் வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நிலக்கரி சாம்பல் அகற்றும் பணிக்கு 28 கோடி ரூபாயை, மின் வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியில், நீர்வளத்துறையினர் விரைவில் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.






      Dinamalar
      Follow us