ADDED : செப் 22, 2024 08:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிமலை:ஆலந்துார் நீதிமன்றம் அருகே, நேற்று முன்தினம் இரவு பரங்கிமலை போலீசார் வாகன சோதனை நடத்தினர். ஒரு காரை மடக்கி சோதனை செய்தபோது, அதில் 'கூலிப், ஹான்ஸ், பான்மசாலா' உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் சிக்கின.
விசாரணையில், பம்மல் பகுதியைச் சேர்ந்த மோகன்ராம், 39, மகேஷ், 43, என தெரிந்தது. இவர்கள், பெங்களூரில் இருந்து குறைந்த விலைக்கு, போதை பொருட்கள் வாங்கி வந்து, சென்னையில் உள்ள வியாபாரிகளுக்கு விற்பனை செய்வது தெரிந்து. இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், 282 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.