/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆந்திராவில் 292 கி.மீ., 3வது புதிய பாதை தயார்! தமிழகம் - டில்லி ரயில்கள் பயண நேரம் குறையும்
/
ஆந்திராவில் 292 கி.மீ., 3வது புதிய பாதை தயார்! தமிழகம் - டில்லி ரயில்கள் பயண நேரம் குறையும்
ஆந்திராவில் 292 கி.மீ., 3வது புதிய பாதை தயார்! தமிழகம் - டில்லி ரயில்கள் பயண நேரம் குறையும்
ஆந்திராவில் 292 கி.மீ., 3வது புதிய பாதை தயார்! தமிழகம் - டில்லி ரயில்கள் பயண நேரம் குறையும்
UPDATED : டிச 12, 2025 07:57 AM
ADDED : டிச 12, 2025 05:31 AM

சென்னை: ஆந்திராவில் விஜயவாடா - கூடூர் வழிதடத்தில், மூன்றாவது பாதை பயன்பாட்டிற்கு வர தயாராகி வருகிறது. தமிழகத்தில் இருந்து ஆந்திரா வழியாக டில்லி செல்லும் விரைவு ரயில்களின் பயண நேரம், 30 நிமிடங்கள் வரை குறையும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னை மற்றும் இதர நகரங்களில் இருந்து, டில்லிக்கு எட்டுக்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இவற்றில், சென்னையில் இருந்து டில்லிக்கு இயக்கப்படும் தமிழ்நாடு, ஜி.டி., துரந்தோ, ராஜ்தானி விரைவு ரயில்கள் மிகவும் பிரபலம்.
தமிழகத்தில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள், புதுடில்லியை இணைக்கும் வகையில், இரட்டை பாதைகள் உள்ளன. இருப்பினும், சில முக்கிய சந்திப்பு மற்றும் நகரங்களில் நான்கு ரயில் பாதை இணைப்புகள் உள்ளன.
எனவே, இரண்டு பாதைகள் மட்டுமே உள்ள பாதைகளில், மூன்றாவது பாதை அமைக்கும் பணிகள் படிப்படியாக நடந்து வருகின்றன.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து டில்லியை இணைக்கும் வழித்தடம் முக்கியமானது. எனவே, இரண்டு பாதைகள் மட்டுமே உள்ள இடங்களில், மூன்றாவது ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஆந்திரா மாநிலத்தில் கூடூர் - விஜயவாடா இடையே, 292 கி.மீ., துாரம் மூன்றாவது ரயில் பாதைக்கான அனைத்து பணிகளும் முடிந்து, விரைவில் பயன்பாட்டிற்கு வர தயாராக உள்ளது. சில வாரங்களில் ரயில் போக்குவரத்து துவங்கும்.
இந்த பாதை பயன்பாட்டிற்கு வரும்போது, தமிழகத்தில் இருந்து ஆந்திரா வழியாக டில்லி செல்லும் விரைவு ரயில்கள் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க முடியும். பயண நேரம் 30 நிமிடங்கள் வரை குறையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

