/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓட்டுநருக்கு வெட்டு 3 பேர் கைது
/
ஓட்டுநருக்கு வெட்டு 3 பேர் கைது
ADDED : ஜன 11, 2026 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கே.கே.: மதுரவாயல் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் அன்பரசன், 38. இவரது மனைவி மஞ்சுளா, 37. கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். அன்பரசன், தாம்பரத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
குன்றத்துாரில் தனியாக வசிக்கும் தன் மனைவியை பார்க்க சென்ற அன்பரசன், தன்னுடன் வாழ வருமாறு அழைத்தார். அவர் வரவில்லை.
இந்நிலையில், மனைவியின் உறவினர்களான, ஆகாஷ் 1 9, பாலாஜி, 25, தீபக்குமார், 21, ஆகியோர், ஆற்காடு சாலையில் நடந்து சென்ற அன் பரசனை, கத்தியால் வெட் டி விட்டு தப்பி னர். காயமடைந்த அன்பரசன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கே.கே., நகர் போலீசார், மூன்று பேரையும் கைது செய்தனர்.

