sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய 3 பேருக்கு சிறை

/

 ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய 3 பேருக்கு சிறை

 ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய 3 பேருக்கு சிறை

 ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய 3 பேருக்கு சிறை


ADDED : டிச 03, 2025 05:14 AM

Google News

ADDED : டிச 03, 2025 05:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீலாங்கரை: ரியல் எஸ்டேட் தொழிலதிபரை கடத்திய வழக்கில், மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

நீலாங்கரையைச் சேர்ந்தவர் பச்சையப்பன், 45. இவரது நண்பர், கே.கே.நகரைச் சேர்ந்த வெற்றி, 43; இருவரும் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகின்றனர்.

பச்சையப்பனுக்கு வேலுாரில் உள்ள இடத்தை விற்பனை செய்து தருவதாக கூறி, சங்கர் என்பவரிடம், வெற்றி 'அட்வான்ஸ்' வாங்கி உள்ளார்.

இதை பச்சையப்பனிடம் கூறவில்லை. இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்தனர். இந்நிலையில், பச்சையப்பனிடம் இருந்து பணம் பறிக்க முயன்ற வெற்றி, கூட்டாளிகள் ஆறு பேருடன் சேர்ந்து, நேற்று முன்தினம் அதிகாலை நீலாங்கரையில் வைத்து பச்சையப்பனை காரில் கடத்திச் சென்றனர்.

பூந்தமல்லியில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து மிரட்டியுள்ளனர்.

இது குறித்து அறிந்த பூந்தமல்லி போலீசார், அங்கு சென்று பச்சையப்பனை மீட்டனர். அங்கிருந்த மூன்று பேரை கைது செய்து, நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், கோட்டூரைச் சேர்ந்த ஜோசப், 52, தீபக் ஜான், 43, முத்துக்குமார், 48, ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து தலா ஒரு கார், ஆட்டோ, பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

பச்சையப்பனின் காருடன் தலைமறைவான வெற்றி உட்பட மூன்று பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us