/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் கிடந்த 3 சவரன் ஒப்படைப்பு
/
சாலையில் கிடந்த 3 சவரன் ஒப்படைப்பு
ADDED : ஜன 27, 2026 05:45 AM

வண்ணாரப்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டை, ராமதாஸ் நகர், வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் மகேஸ்வரி, 25. இவர், தன்னிடம் இருந்த 3 சவரன் நகையை அடகு வைக்க, நேற்று முன்தினம் இரவு கடைக்கு எடுத்துச் சென்றார். ஆனால், அடகு வைக்காமல் திரும்ப சென்றார். வழியில் அந்த நகை மாயமானது.
இந்நிலையில், நேற்று காலை, அவ்வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுநரான முகமது ரபிக், சாலையில் கிடந்த, 3 சவரன் செயினை எடுத்து அருகில் இருந்த, அடகு கடை உரிமையாளர் வாயிலாக நகையின் உரிமையாளரை கண்டறிந்து, வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீசார் மகேஸ்வரியை வரவழைத்து, செயினை அவரிடம் ஒப்படைத்தனர். போலீசார் ஆட்டோ ஓட்டுநரின் செயலை பாராட்டி சன்மானம் வழங்கினர்.

