/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவள்ளூர் தடத்தில் 3 ரயில்கள் ரத்து
/
திருவள்ளூர் தடத்தில் 3 ரயில்கள் ரத்து
ADDED : செப் 25, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ஆவடி யார்டில் மேம்பாட்டு பணி காரணமாக, சென்ட்ரல் - திருவள்ளூர் தடத்தில், மூன்று மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
இது குறித்து, சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு 12:15 மணி ரயில்கள் இன்று, 26, 27ம் தேதியில் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்ட்ரல் இரவு 10:45 மணி ரயில் இன்றும், நாளையும் ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும்.
மேலும், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்ட்ரல் அதிகாலை 3:30 மணி ரயில் இன்று, 26, 27ம் தேதிகளில் ஆவடியில் இருந்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.