sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கோயம்பேடில் இருந்து ஆம்னி பஸ் முன்பதிவு 30 சதவீதம் அதிகரிப்பு

/

கோயம்பேடில் இருந்து ஆம்னி பஸ் முன்பதிவு 30 சதவீதம் அதிகரிப்பு

கோயம்பேடில் இருந்து ஆம்னி பஸ் முன்பதிவு 30 சதவீதம் அதிகரிப்பு

கோயம்பேடில் இருந்து ஆம்னி பஸ் முன்பதிவு 30 சதவீதம் அதிகரிப்பு


ADDED : பிப் 13, 2024 12:16 AM

Google News

ADDED : பிப் 13, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, பிப். 13- கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் திறக்கப்பட்ட பின், கோயம்பேடு, எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பயணியரை ஏற்றி செல்லவும், இறக்கி விடவும், கடந்த மாதம் 24ம் தேதி முதல் முதல் தடை உத்தரவு அமலானது.

அதன்பின், சென்னை நகருக்குள் பயணியருடன் ஆம்னி பேருந்துகள் அனுமதிக்கப்படவில்லை.

இதையடுத்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உயர் நீதிமன்றத்தை நாடினர். இதற்கிடையே, கோயம்பேடில் இருந்து பயணியரை ஏற்றி இறக்கவும், போரூர், சூரப்பட்டில் பயணியரை ஏற்றி, இறக்கவும் நீதிமன்றம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கிடையே, கடந்த சில நாட்களாக, கோயம்பேடில் ஆம்னி பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுகின்றன.

இது குறித்து, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறியதாவது:

கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கும்போது, பயணியர் சிரமப்பட்டனர்.

மேலும், அவர்களின் இருப்பிடத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை பிடிக்கவே, நீண்ட துாரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கிடையே, கோயம்பேடில் இருந்து புறப்பட்டு, போரூர், சூரப்பட்டு வழியாக பயணியரை ஏற்றி, இறக்கி செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இதனால், பல ஆயிரகணக்கான பயணியர் சிரமம் இன்றி, ஆம்னி பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர். கிளாம்பாக்கத்தில் இருந்து மீண்டும் கோயம்பேடிற்கு மாற்றியதால், ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்வதும், 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us