ADDED : பிப் 08, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பேரி, சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி, கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அதன்படி, கடந்த ஒன்பது நாட்களில் வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், 32 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 325 கிலோ கஞ்சா, 58 கிராம் மெத் ஆம்பெட்டமைன், 20 மொபைல் போன்கள், 64,000 ரூபாய், மூன்று கார்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்தாண்டில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக, 18 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

