/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்ஸ்பெக்டர்கள் 36 பேர் மாற்றம்
/
இன்ஸ்பெக்டர்கள் 36 பேர் மாற்றம்
ADDED : பிப் 05, 2026 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை, தாம்பரம், ஆவடி கமிஷனரகத்தில் பணிபுரியும், 36 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து, கமிஷனர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சென்னை, தாம்பரம், ஆவடி கமிஷனரகத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, நேற்று ராஜமங்கலம் சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் மூர்த்தி, நீலாங்கரை சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ், சிந்தாதிரிப்பேட்டை சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தனசேகர் உட்பட, 36 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

