sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'இன்னுயிர் காப்போம்' திட்டத்தில் 4 லட்சம் பேருக்கு சிகிச்சை 

/

'இன்னுயிர் காப்போம்' திட்டத்தில் 4 லட்சம் பேருக்கு சிகிச்சை 

'இன்னுயிர் காப்போம்' திட்டத்தில் 4 லட்சம் பேருக்கு சிகிச்சை 

'இன்னுயிர் காப்போம்' திட்டத்தில் 4 லட்சம் பேருக்கு சிகிச்சை 


ADDED : ஜூலை 07, 2025 04:23 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவேற்காடு:''இன்னுயிர் காப்போம்- திட்டத்தில் ௪ லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்,'' என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.

சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை, தமிழக அரசே மேற்கொள்ளும் வகையில் 'இன்னுயிர் காப்போம்- -- -நம்மைக் காக்கும் 48' திட்டம் 2021ல் துவக்கப்பட்டது. இதில், தனியார் மருத்துவமனைகளும் இணைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ், பாரிவாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன், 33, என்பவர், 4 லட்சமாவது நபராக திருவேற்காடு, வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ்., மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை நேற்று சந்தித்து நலம் விசாரித்தபின், அமைச்சர் சுப்ரமணியன், கூறியதாவது:

சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரம் மிக முக்கியம் என்பதைக் கருத்தில் வைத்து இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது. அரசின் சார்பில் 2 லட்சம் ரூபாய் தந்து, அவர்கள் உயிர் காப்பாற்றப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களைச் சேர்ந்தோரும் பயனடைந்து வருகின்றனர்.

அந்தவகையில், அரசு மருத்துவமனைகளில் 3,69,785 பயனாளிகளுக்கு 313 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது; தனியார் மருத்துவமனைகளில், 30167 பயனாளிகளுக்கு, 51.95 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 365 கோடி ரூபாய் செலவில், 4 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us