/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெளிநாட்டு பாட்டிலில் 'புதுச்சேரி மது' அண்ணா நகரில் 4 பேர் சிக்கினர்
/
வெளிநாட்டு பாட்டிலில் 'புதுச்சேரி மது' அண்ணா நகரில் 4 பேர் சிக்கினர்
வெளிநாட்டு பாட்டிலில் 'புதுச்சேரி மது' அண்ணா நகரில் 4 பேர் சிக்கினர்
வெளிநாட்டு பாட்டிலில் 'புதுச்சேரி மது' அண்ணா நகரில் 4 பேர் சிக்கினர்
ADDED : ஜன 22, 2025 12:48 AM

அண்ணா நகர், அமைந்தகரை வழியாக, வெளிநாட்டு மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக, அண்ணா நகர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைந்தது. அதன்படி, நெல்சல் மாணிக்கம் சாலையில், நேற்று காலை அண்ணாநகர் மது விலக்கு போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்ததில், 50க்கு மேற்பட்ட வெளிநாட்டு மதுபாட்டில்கள் சிக்கின. அதில் இருந்தவர்கள் கொடுங்கையூரைச் சேர்ந்த முகமது நசீம், 30, ராவுத்தர் நாயிநார் முகமது, 30, சையது அப்துல், 31, மாதவரத்தை சேர்ந்த கார்த்திக், 26, என்பது தெரிந்தது.
விசாரணையில், புதுச்சேரியில் இருந்து குறைந்த விலைக்கு மது வாங்கி வந்து, வெளிநாட்டு காலி மதுபாட்டிலில் ஊற்றி, அதிக விலைக்கு விற்றது தெரிந்தது.
இதற்கு, கொடுங்கையூரில் வசிக்கும், திருவள்ளூரைச் சேர்ந்த கோபி, 42, என்பவர் மூளையாக செயல்பட்டு, லட்ச கணக்கில் சம்பாதித்துள்ளார். நேற்று மாலை, கொடுங்கையூரில் உள்ள வீட்டில் சோதனை செய்ததில், புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட, 481 ஒரு லிட்டர் மதுபாட்டில்கள், 925 காலி வெளிநாட்டு மதுபாட்டில்கள் இருந்தன.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார், நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான கோபியை போலீசார் தேடி வருகின்றனர்.